Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்புகளை பிடிக்க லைசென்ஸ்.. வாவா சுரேஷுக்கு வழங்க வனத்துறை முடிவு..!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:00 IST)
பாம்புகள் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசென்ஸ் வழங்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் கடந்த 30 ஆண்டுகளாக பாம்புகளைப் பிடித்து வருகிறார். குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் பிடித்துள்ளார். அதில் கொடிய விஷத்தன்மை உள்ள பாம்புகளும் உண்டு.

கடந்த ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் குடியிருப்பில் புகுந்த நல்ல பாம்பை மீட்கச் சென்ற போது அவரை பாம்பு கடித்தது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில்,  வாவா சுரேஷுக்கு கேரள மாநில வனத்துறை பாம்புகளை பிடிப்பதற்கான லைசென்ஸ் வழங்க முடிவு செய்துள்ளது.  வாவா சுரேஷ் அறிவியல் பூர்வமாக பாம்புகளைப் பிடிப்பதில்லை என வனத்துறை அதிகாரிகள் கூறி வந்த நிலையில் தற்போது அவருக்கு அனுபவத்தின் அடிப்படையில்  பாம்புகளை பிடிக்க லைசென்ஸ் வழங்கப்படவுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments