Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேஷ்டி அணிந்ததால் விவசாயிக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை ஒருவாரம் மூட உத்தரவு

Mahendran
வியாழன், 18 ஜூலை 2024 (15:53 IST)
பெங்களூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேஷ்டி அணிந்த விவசாயி ஒருவரை காவலாளி உள்ளே விட மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திநிலையில் அந்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பெங்களூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விவசாயி மற்றும் அவருடைய மகன் திரைப்படம் பார்க்க சென்றனர். அதற்கான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயி வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த நிலையில் வேட்டி அணிந்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுத்ததாக தெரிகிறது.
 
இது குறித்த புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் வணிக வளாகம் முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
ந்த நிலையில் வணிக வளாகத்தின் பாதுகாப்புத்துறை நிர்வாகி விவசாயி இடம் மன்னிப்பு கேட்ட நிலையில் கர்நாடகா அரசு தற்போது அதிரடியாக வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த உத்தரவை நகர வளர்ச்சி துறை அமைச்சர் சுரேஷ் பிறப்பித்த நிலையில் இது குறித்து மேலும் விசாரணை செய்யப்படும் என்றும் விவசாயியை அனுமதிக்காத பாதுகாப்பு காவலாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments