Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோ to மற்ற நெட்வொர்க்குகளுக்கு இனிமேல் இலவசம் – அறிவிப்புக்குப் பின்னுள்ள காரணம்!

ஜியோ to மற்ற நெட்வொர்க்குகளுக்கு இனிமேல் இலவசம் – அறிவிப்புக்குப் பின்னுள்ள காரணம்!
, வியாழன், 31 டிசம்பர் 2020 (16:54 IST)
ஜியோ தனது நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க நிமிடத்துக்கு 6 பைசா வசூலித்து வந்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே அரசு இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், பொருட்களை கண்டால் துவம்சம் செய்து விடுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் ஜியோவுக்கு எதிரான மனநிலையே உள்ளது.

இதனால் ஜியோ இப்போது வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தும் விதமாக தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க வசூலித்து வந்த 6 பைசா கட்டணத்தை ரத்து செய்து இலவசமாக அழைக்கலாம் என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19 வயது கல்லூரிப் பெண் தற்கொலை… வீடியோவை வைத்து மிரட்டிய மர்ம நபர் யார்?