Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியை வதைக்கும் குளிர்; டயர்களில் படுக்கை! – மாணவிக்கு குவியும் பாராட்டுகள்!

டெல்லியை வதைக்கும் குளிர்; டயர்களில் படுக்கை! – மாணவிக்கு குவியும் பாராட்டுகள்!
, வியாழன், 31 டிசம்பர் 2020 (12:03 IST)
டெல்லியில் குளிர் வதைத்து வரும் நிலையில் பழைய டயர்களை படுக்கையாக்கி சாலையோர விலங்குகளை காப்பாற்றியுள்ளார் மாணவி ஒருவர்.

நாளுக்கு நாள் டெல்லியில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்களே காலை விடிந்தும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையோரம் வசிக்கும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் குளிரை தாங்க முடியாமல் தவித்து வருகின்றன.

இதைக்கண்ட டெல்லி கால்நடை மருத்துவ மாணவி விபா தோமர் விலங்குகளுக்கு உதவ புதிய ஐடியாவை யோசித்துள்ளார். டெல்லியில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட பழைய டயர்கள், கோணிப்பை ஆகியவற்றை சேகரித்து அவற்றில் விலங்குகள் படுத்துறங்கும் வகையில் படுக்கை தயாரித்துள்ளார். மேலும் அவற்றிற்கு குளிராமல் இருக்க ஆடைகளையும் தயாரித்து அணிவித்துள்ளார். அவரது இந்த விலங்குகள் மீதான அன்பிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஸ்டேக் கட்டாயம்; கால அவகாசம் நீட்டிப்பு! – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!