ஜெய்ப்பூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் துப்புரவு பணியாளர்கள், கழிவுப்பொருட்களிலிருந்து 5,000-க்கும் அதிகமான ராக்கிகளை தயாரித்துள்ளனர். இந்த சிறப்பு வாய்ந்த ராக்கிகள், ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூர் மாநகராட்சியை சேர்ந்த மேயர் சௌமியா குர்ஜார் முன்னெடுத்த இந்த முயற்சி, மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல்' ஆகிய கொள்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது.
இந்த துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் கவர்கள், பழைய துணிகள், மீந்துபோன அலங்கார பொருட்கள், நூல்கள், கம்பளி, மற்றும் அட்டை பெட்டிகள் போன்ற பல்வேறு கழிவு பொருட்களை பயன்படுத்தி இந்த நுட்பமான ராக்கிகளை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கிகள் நகரிலுள்ள மரங்களிலும் கட்டப்பட்டுள்ளன. இது தூய்மைக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள அர்ப்பணிப்பை குறிக்கிறது.