Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.டி. ஊழியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வாங்கவேண்டும்; சுகாதாரத்துறை கறார்.

ஐ.டி. ஊழியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வாங்கவேண்டும்; சுகாதாரத்துறை கறார்.

Arun Prasath

, புதன், 4 மார்ச் 2020 (19:21 IST)
ஐ.டி.ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கூறியுள்ளார்.

சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இது வரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஈரான் ஆகிய உலக நாடுகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொறியாளர்கள் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கர்நாடகாவின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவைத் அக்தர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிப்டோ கரன்சி தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி!