Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 – இஸ்ரோ தகவல்

விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 – இஸ்ரோ தகவல்
, புதன், 12 ஜூன் 2019 (16:45 IST)
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 1 என்ற விண்கலம் 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 1 ஐ விட மேம்பட்ட தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2. இதற்காக சுமார் 800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விண்கலத்தில் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் வாகனம் உடன் செல்கிறது. மேலும் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதிகளை ஆய்வு செய்யபோவதாக கூறப்படுகிறது.
இந்த விண்கலம் எதிர்வரும் ஜூலை 15 அன்று அதிகாலை 2.15க்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’காதல் சின்னத்தை’ சுற்றிப் பார்க்க ’இவ்ளோ மணி நேரம்தான் ’ ! மக்கள் அதிருப்தி ?