ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

Mahendran
திங்கள், 31 மார்ச் 2025 (13:56 IST)
பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வு குறித்து ஆலோசிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை  மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு சமீபத்தில் பிரதமர் மோடி சென்றிருந்தார். பிரதமராக பதவியேற்ற பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கு முதன்முறையாக விஜயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், "பதவிக்காலம் முடிந்து விட்டதால், ஓய்வு குறித்து அறிவிக்கவே மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் சென்றார். ஆர்எஸ்எஸ் புதிய தலைமை மாற்றத்தை விரும்புகிறது. அடுத்த பிரதமரை அவர்கள் தேர்வு செய்வார்கள்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
 
இந்த கருத்து அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய், "75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அறிவிப்பது ஆர்எஸ்எஸ் நெறிமுறை. மோடியின் காலம் முடிந்துவிட்டது" என்றார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கொடுத்த பணத்தில் இழப்பீட்டு பணத்தில் மருமகன் கொண்டாட்டம்! மாமியார் கதறல்!

10 மாத குழந்தைக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு.. குலுக்கலில் கிடைத்த அதிர்ஷ்டம்..!

பயிர்ச்சேதமோ ரூ.72,466.. அரசு கொடுத்த இழப்பீடு வெறும் ரூ.2.30.. அதிர்ச்சி அடைந்த விவசாயி..!

டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா? மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments