Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40% ஜிஎஸ்டி வரி : ஐபிஎல் டிக்கெட் விலை உயரும் என தகவல்.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

Advertiesment
ஐபிஎல்

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (10:11 IST)
ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. 28%லிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்புடன் சேர்த்து, மாநில அரசுகள் விதிக்கும் கேளிக்கை வரியும் காரணமாக, சில மாநிலங்களில்  டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின்படி, ஆடம்பர மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு 40% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் "வணிக ரீதியான பொழுதுபோக்கு" என்று கருதப்படுவதால், அதற்கான டிக்கெட்டுகளும் இந்த 40% ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வரி உயர்வு, டிக்கெட் விலையை நேரடியாக பாதிக்கும் என்பதால், ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து, ஐபிஎல் டிக்கெட்டுகள் 28% ஜி.எஸ்.டி.யின் கீழ் இருந்து வந்தன. இந்த வரி, அடிப்படை டிக்கெட் விலையுடன், மாநில கேளிக்கை வரியையும் சேர்த்து விதிக்கப்படுவதால், சில சமயங்களில் ரசிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
 
ஏற்கெனவே, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வரும் நிலையில், புதிய வரி உயர்வு ரசிகர்களுக்கு மேலும் சுமையாக அமையும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விற்கிறது மத்திய அரசு.. மானிய விலையில் கிடைக்கும்..!