Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்க இடைக்கால தடை!

xiomi
, சனி, 7 மே 2022 (18:52 IST)
ஜியோமி  நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஜியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து,  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் செயப்பட்டு வரும் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம்.  இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.34,000 கோடி வருமானம்  ஈட்டிவரும் நிலையில், இதில் பெரும்பானையை சீனாவின் உள்ள தலைமை நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.

இந்த  நிறுவனத்தின்  உற்பத்தியாளர்களுக்கு ஜியோமி நிறுவனம் தொழில் நுட உள்ளீடு , மென்பொருள் தொடர்பான உதவிகள் செய்யவில்லை என வும், ஆனால், சேவை வழங்காத மூன்று வெளி நாட்டு  நிறுவனங்களுக்கு பணம் பறிமாற்றம் செய்துள்ளது. இப்பணத்தைச் செலுத்தும்போது, வங்கிகளுக்கு தவறான தகவல் தெரிவித்துள்ளது.

எனவே,சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக  விசாரணைக்குப் பிறகு, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999ன் கீழ்  ஜியோமியின்ரூ. 5551.27 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இதை எதிர்த்து ஜியோமி நிறுவனம் கர் நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசார்த்த நீதிமன்றம், ஜியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது.  மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ விபத்து..ஆவணங்கள் எரிந்து நாசம்!