Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்: என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:44 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பதும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை அன்று இரவுக்குள் கிட்டத்தட்ட முடிவு தெரிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும் நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று மாலை 4:30 மணி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை செய்தனர் என்பதும் தேர்தல் முடிவுகளுக்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments