Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடற்படை விமானங்களில் பெண் விமானிகள்! – இந்திய கடற்படையில் சாதனை!

கடற்படை விமானங்களில் பெண் விமானிகள்! – இந்திய கடற்படையில் சாதனை!
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:06 IST)
இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானங்களை இயக்க முதன்முறையாக மூன்று பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையில் உள்ள டோர்னியர் ரக விமானங்கள் கடல்பகுதியில் பறந்து ரொந்து பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டோர்னியர் விமானங்களை இதுவரை ஆண் விமானிகள் மட்டுமே இயக்கி வந்த நிலையில் முதன்முறையாக இந்த விமானங்களை இயக்க பெண் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ள இந்த பெண் விமானிகள் விரைவில் கடற்படை பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2200 கிமீ சைக்கிள் பயணம் செய்யும் 68 வயது மூதாட்டி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!