Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

Siva
புதன், 4 ஜூன் 2025 (09:41 IST)
ஆபரேஷன் சிந்தூர்  தாக்குதலின் போது பாகிஸ்தானில் உள்ள ஒன்பது ராணுவ தளவாடங்களை இந்தியா அழித்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு இடங்களை இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா–பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் உள்ளே உள்ள பெஷாவர் மற்றும் அட்டோக் ஆகிய இரண்டு பகுதிகளையும் இந்திய படைகள் தாக்கியதாகவும், அதனால் அந்த பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
இந்த அறிக்கையில் இந்தியா, பாகிஸ்தானில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு கூறியபோதிலும், அதற்கான எந்த விதமான ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில், இந்தியா கூட தெரிவிக்காத இந்த இரண்டு இடங்களின் தாக்குதல்களை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தியா தாக்கிய தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளே துணை குடியரசு தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

எங்களுடன் வாங்க.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments