Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

Advertiesment
PM Modi speech

Mahendran

, புதன், 7 மே 2025 (14:08 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியா இந்திய முப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இடங்கள், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என மொத்தம் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 
இந்த தாக்குதல், பஹல்காமில் இந்திய படைவீரர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்திய படைகளை பாராட்டினர்.
 
மேலும், வெளிநாட்டு அமைச்சக செயலாளர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதுகுறித்து ஊடகங்களுக்கு விரிவான விளக்கங்களையும் ஆதாரங்களையும் வழங்கினர்.
 
இந்நிலையில், “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
 
இதற்கிடையில், பிரதமர் மோடியின் தலைமையில்  அமைச்சரவை கூட்டமும் நடந்தது. நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் போருக்கு செல்வேன்: நயினார் நாகேந்திரன்