Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தனை விடுவிக்க மத்திய அரசின் ராஜதந்திரம் இதுதான்;

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (22:18 IST)
நேற்று பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர் அபிநந்தன் சிக்கி கொண்டதும், அவரை வைத்து பாகிஸ்தான், இந்தியாவிடம் சில விஷயங்களை சாதித்து கொள்ள திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
 
குறிப்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. ஆனால் இந்தியாவிடம் இருந்து பேச்சுவார்த்தை இல்லை என்ற பதில் அழுத்தந்திருத்தமாக வந்தது. மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா நேரடியாக வேண்டுகோள் விடுக்காமல் உலக நாடுகளிடம் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது
 
குறிப்பாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அரபு நாட்டு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன், அரபுநாடுகள் உள்பட ஒரே நேரத்தில் 20 நாட்டு தலைவர்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தான், அபிநந்தனை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியாவின் இந்த ராஜதந்திரம் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments