Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபிநந்தன் எங்கு எப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்? வெளியான விவரங்கள்

அபிநந்தன் எங்கு எப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்? வெளியான விவரங்கள்
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:17 IST)
பாகிஸ்தானிடம் போர் கைதியாக சிக்கியுள்ள அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில் அவர் எங்கு எப்படி ஒப்படைக்கப்படுகிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. 
 
நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. 
 
இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். பாகிஸ்தானிடம் இருந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 
webdunia
இதனையடுத்து விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டு, அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்ற செய்தியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார். 
 
இந்நிலையில் அபிநந்தன் எப்படி எங்கு ஒப்படைக்கப்படுகிறார் என்ற தகவ்ல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசு அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்படுகிறார்.
 
இந்தியா பாகிஸ்தானின் நாடுகளின் எல்லையான வாகாவில் வைத்து நாளை இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் அதிகாரிகளால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'இந்தியா - பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி வருகிறது' - டிரம்ப்