Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

Advertiesment
5.5ஜி

Siva

, திங்கள், 19 மே 2025 (17:27 IST)
இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. 'ஒன்பிளஸ் 13 எஸ்' என அழைக்கப்படும் இந்த மொபைல், வருகிற ஜூன் 5ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 
சீனாவில் உருவாகும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. தற்போதைய மாடலான 13 எஸ், புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவருகிறது. இதில் Snapdragon 8s Gen 3 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், 'Cryo-Velocity' எனும் வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பும் உள்ளது.
 
ஒரு முறையே சார்ஜ் செய்தால், 14 மணி நேரம் வரை வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வழக்கமான கால் பயன்படுத்தும் போது 7 மணி நேரம் பேசி விடலாம்.
 
இந்த மொபைல் கருப்பு வெல்வெட், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி நினைவகத்துடன் ரூ.42,998 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மாடல் 5.5ஜி இணைப்பை ஆதரிக்கக்கூடியது என்பதோடு, அதிக நெருக்கமான இடங்களிலும் வேகமாக இணைய இணைப்பை வழங்கும் திறனுடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
புதிய தொழில்நுட்பத்தை எதிர்பார்த்திருக்கும் பயனர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
 
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!