Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

Advertiesment
கொல்கத்தா ஐஐடி

Siva

, ஞாயிறு, 20 ஜூலை 2025 (11:46 IST)
கொல்கத்தாவில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கு, நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியது.
 
 கொல்கத்தா ஐஐடியில் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொல்கத்தா ஐஐடியில் படித்து வந்த மாணவி ஒருவரை, அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
குற்றம் சாட்டப்பட்டவரை ஆரம்ப கட்டத்திலேயே ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை பாதிக்கும் என்று கூறி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் அந்த மாணவருக்கு 50,000 ரூபாய் பிணைப் பத்திரத்தில் ஜாமீன் வழங்கியது.
 
மாணவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையை மாணவருக்கு நீதிமன்றம் விதித்துள்ளது.
 
பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு மாணவரை கைது செய்த ஓரிரு நாட்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டது, தற்போது பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!