Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இக்கட்டான நிலையில் 8 மாணவிகள்: கைகொடுத்து உதவிய இன்ஸ்பெக்டர்

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (01:02 IST)
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இக்கட்டான நிலையில் இருந்த 8 மாணவிகளுக்கு சரியான நேரத்தில் உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று பொதுத்தேர்வு தொடங்கியதை அடுத்து இந்த தேர்வை எழுத ஐதராபாத்தை சேர்ந்த எட்டு மாணவிகள் பேருந்து ஒன்றில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். தேர்வு ஆரம்பிக்க ஒருசில நிமிடங்களே இருந்ததால் மாணவிகள் பதட்டத்தில் இருந்த நிலையில் திடீரென பேருந்து பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்று விட்டது.

தேர்வு எழுதும் பள்ளி இரண்டு கிலோமீட்டரே என்றாலும் அங்கிருந்து எப்படி செல்வது என்று அந்த மாணவிகள் தவித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு, எட்டு மாணவிகளின் நிலைமையை உணர்ந்து தானே அவர்களை பள்ளிக்கு தனது காரில் அழைத்து செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து அந்த எட்டு மாணவிகளும் போலீஸ் பேட்ரோல் வாகனத்தில் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்று தேர்வை எழுதினர். சரியான சமயத்தில் உதவி செய்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு சமூக இணையதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments