Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமான ஒருசில நாட்களில் மனைவியை விற்றவர் கைது: அதிர்ச்சி சம்பவம்!

Marriage
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (16:35 IST)
திருமணமான ஒரு சில நாட்களில் மனைவியை வேற ஒருவருக்கு விற்க முயன்ற கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். கடைசி வரை ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்பது தான் திருமணம் என்றும் பழங்கால முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
ஆனால் தற்போதைய நாகரீக உலகில் திருமணம் என்பது ஒரு விளையாட்டு பொருள் போலாகி விட்டது என்பதும் திருமணத்தை வைத்து பல மோசடிகள் நடந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திருமணம் நடந்தவுடன் வேலை தேடி வேலைக்கு செல்வதாக மனைவியை அழைத்துச் சென்ற கணவர், டெல்லியில் தனது மனைவியை விற்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஒடிசாவை சேர்ந்த கிரா பெருக் என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் அவர் தனது மனைவியை விற்க முயற்சி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விற்கப்பட்ட பெண் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை மூலம் அந்த பெண் மிட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
திருமணமான ஒரு சில நாட்களிலேயே தனது மனைவியை விற்பனை செய்ய முயற்சித்த கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு போவது சரியா? - இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை!