Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: இந்திய வானிலை மையம்

snow
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:35 IST)
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனி பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில் பனித்திரை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் டெல்லி போன்ற மாநிலங்களில் சுமார் 6 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் பதிவாகியுள்ளதை அடுத்து வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது
 
அதேபோல் ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் அடர்ந்த பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா? கார்கே பேச்சுக்கு கடும் கண்டனம்!