Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல்காந்தியோடு கை கோர்க்கும் கமல்ஹாசன்!? – டெல்லியில் சந்திப்பு!

ராகுல்காந்தியோடு கை கோர்க்கும் கமல்ஹாசன்!? – டெல்லியில் சந்திப்பு!
, ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (16:14 IST)
இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல்காந்தி நடத்தி வரும் நிலையில் கமல்ஹாசனும் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்களை தாண்டி பயணித்து வருகிறார்.

தற்போது 100வது நாளை எட்டியுள்ள இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இணைய உள்ளார். இந்த பாத யாத்திரை வரும் 24ம் தேதியன்று டெல்லிக்கு வர உள்ளது. அப்போது டெல்லியில் ராகுலோடு கை கோர்த்து கமல்ஹாசனும் பாத யாத்திரை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்: விரைவில் திறக்க ஏற்பாடு!