Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சக்கட்ட பரபரப்பில் சபரிமலை: 2,300 போலீசார் குவிப்பு

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (08:30 IST)
சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுவதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் அங்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர். 
 
அப்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் 4000 பேரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுவதால் சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது ஒருபுறம் இருக்க பெண்களை கோவிலுக்குள் அனுமதி அளிக்கக்கூடாது என கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments