Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறீர்களா ? மாணவரிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி

நீங்கள்  போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறீர்களா ? மாணவரிடம் கேள்வி எழுப்பிய பிரதமர்  மோடி
, சனி, 1 ஆகஸ்ட் 2020 (17:44 IST)
உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக மாணவர்களிடம் உரை யாற்றி வருகிறார்.,இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் என்று கூறினார்.

அப்போது மழைப் பொழியை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்து விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஒரு சானிடரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு அரசு கொடுக்கிறது.  மறுமுறை பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றும் மறுமுறை பயன்படுத்தப்படக்கூடிய நாப்கின்களை உருவாக்கிய மாணவரை பாராட்டுகிறேன் எனவும் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது இப்புதிய கல்விக் கொள்கையினால் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும்  தீர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊருகுவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கருவியை உருவாக்கியுள்ளார்., அதுகுறித்து கேட்டு பாராட்டிய பிரதமர்  மோடி நீங்கள் எப்போதாவது காவல்துறைக்குச் சென்றுள்ளீர்களா எனக்கேள்வி எழுப்ப் கல்வி, கேள்வி, தீர்மானித்தல் ஆகிய மூன்றிலும் இளைஞர்கள்  கண்டிப்பாக செயல்பட வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கை மீறினால் பாஸ்போர்ட் முடக்கம்: கறார் காட்டும் காவல்!