Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயான ஊழியர்களும் முன்கள பணியாளர்களே! – குஜராத் அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:36 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவியுள்ள நிலையில் குஜராத்தில் மயான பணி செய்வோரும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இறந்தவர்களை எரியூட்டும் பணி அதிகரித்துள்ளது. பல இடங்களில் எரியூட்டும் மயானங்களில் ஆள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்நிலையில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. மயானத்தில் பணி புரிபவர்கள் தொற்று காரணமாக உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments