Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ள தினசரி பலி – இன்றைய இந்திய நிலவரம்!

தொடர்ந்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ள தினசரி பலி – இன்றைய இந்திய நிலவரம்!
, வியாழன், 13 மே 2021 (09:28 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,58,317 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 37,10,525 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 17,72,14,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை தடுக்க 2 மாதமாவது முழுமுடக்கம் அவசியம்! – ஐசிஎம்ஆர் கருத்து!