Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் போட சொன்ன சக ஊழியை; இரும்பு கம்பியால் தாக்கிய பணியாளர்! – சிசிடிவி வீடியோவால் கைது!

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (15:06 IST)
ஆந்திர பிரதேசத்தில் சக ஊழியர் மாஸ்க் அணியாமல் வந்ததை சுட்டிக்காட்டிய ஊழியை தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியே வந்தாலே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில் முகக்கவசம் அணிவது, சானிட்டைசர் உபயோகிப்பது உள்ளிட்டவை கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திரா சுற்றுலா துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் தனது சக பணியாளர் முகக்கவசம் அணியாமல் வந்ததை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலிடத்திற்கு புகார் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முகக்கவசம் அணியாமல் வந்த ஊழியர் பெண் ஊழியரை சரமாரியாக அடித்துள்ளார். கையில் கிடைத்த இரும்பு கம்பியை கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தாக்கிய ஊழியரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் பரவியுள்ள நிலையில் ஊழியரின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments