சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

Mahendran
சனி, 16 ஆகஸ்ட் 2025 (13:30 IST)
டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் பிரபல ரவுடியான சல்மான் தியாகி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறை அதிகாரிகள் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கொலை, மிரட்டி பணம் பறித்தல், மற்றும் மகாராஷ்டிரா கண்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் ஆக்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் சல்மான் தியாகி. அவர் ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. சிறை நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டுள்ளனர். மேலும், விசாரணைக்காக, சிறைச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
 
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “சல்மான் தியாகியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இருப்பினும், மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர். ஒரு ரவுடி சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments