காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ முகமது கான் என்பவர் துளசி பாக் என்ற பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் தொழுகை நடத்த சென்றபோது, பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து திடீரென தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு, குரேஸ் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முகமது கான், பின்னர் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.