அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த பேரழிவான விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 170 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணியும் இருந்தது உறுதியாகியுள்ளது. இவர் பயணித்தது குறித்து அறிந்ததும், சமூகத்தில் பெரும் பரபரப்பும், அவரது வெளிநாட்டு பயணத்திற்கான காரணம் குறித்த ஆர்வமும் உருவாகியது. ரூபாணியின் கடைசி புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரூபாணியின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கும் வட்டாரங்கள் கூறுவதாவது, கடந்த ஆறு மாதமாக லண்டனில் தங்கியிருந்த அவரது மனைவி அஞ்சலிபென் ரூபாணியை அழைத்து வர அவர் பயணித்துள்ளதாக தெரிகிறது. மனைவியை அழைத்து வர சென்றவர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் பயண தரவுகளின்படி, விஜய் ரூபாணி பிஸினஸ் கிளாஸ் பகுதியில் 2-D இடத்தில் அமர்ந்திருந்தார் என்பதும் உறுதியாகியுள்ளது.