Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெறும் முன் போலி சாவி தயாரித்த பேங்க் மேனேஜர்.. லாக்கர் கொள்ளையில் திடுக் தகவல்..!

Mahendran
சனி, 12 ஜூலை 2025 (11:31 IST)
கனரா வங்கியில் பணிபுரிந்த மேலாளர் ஒருவர், ஓய்வுபெறும் முன் லாக்கர்களுக்கான போலி சாவியைத் தயாரித்ததாகவும், அதன் பின் அவர் சதித் திட்டம் தீட்டி லாக்கர் கொள்ளையை நடத்தியதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியில் கடந்த மே மாதம் லாக்கர் கொள்ளை நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.53 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில், இந்த கொள்ளையில் முக்கியக் குற்றவாளி விஜயகுமார் என்பவர் என்றும், இவர் அதே வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது. தான் பணியில் இருந்தபோது லாக்கர்களுக்கான போலி சாவிகளை தயாரித்து, அதன் பின் ஒரு கும்பலை சேர்த்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதுவரை இந்தக் கொள்ளையில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 39 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொள்ளையில் இன்னும் சில குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்களையும் விரைவில் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments