Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. காரணம் அதே 14 வயது உடன் படிக்கும் மாணவர்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 12 ஜூலை 2025 (10:59 IST)
14 வயது மாணவி ஒருவர் கர்ப்பமானதாகவும் அவரை அந்த மாணவியுடன் படிக்கும் மாணவர் தான் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவி கர்ப்பமாகி உள்ளார் என்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்த போது அவருடன் படிக்கும் மாணவர் தான் தன்னிடம் எல்லை மீறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
 
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் மாணவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து கொண்டிருப்பதாகவும் அப்போது கடந்த மே மாதமே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தற்போது அந்த மாணவி கர்ப்பமானதால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து மாணவரிடம் மேல்விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்