Publish Date: Tue, 30 Aug 2022 (19:20 IST)
Updated Date: Tue, 30 Aug 2022 (19:22 IST)
நாளை முதல் விமான பயணிகளின் டிக்கெட் கட்டணம் குறையும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்புகளை நீக்கி உள்ளதாக விமான போக்குவரத்து துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது
இதனை அடுத்து கொரோனா பாதிப்புக்கு முன்பு விமான டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற அறிவிப்புகளை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது.
விமான கட்டணங்கள் குறைந்தால் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன