Publish Date: Tue, 19 Oct 2021 (16:10 IST)
Updated Date: Tue, 19 Oct 2021 (16:11 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திர பிரதாப் திவாரி. இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் எம்எல்ஏ திவாரி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது
இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தகவல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது