Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு.! மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு..!!

Senthil Velan
செவ்வாய், 14 மே 2024 (15:31 IST)
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், 2009ல் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின், இலங்கையில், அவர்களது நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..!!!
 
இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments