Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனாமி போல் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும்: ஏஐ குறித்து ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர்

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (14:26 IST)
ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தால் வேலைவாய்ப்பில் சுனாமி போல் பாதிப்பு ஏற்படும் என்று ஐ எம் எஸ் நிர்வாக இயக்குனர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதை அடுத்து மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதற்கு பதிலாக ஏஐ  தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று இன்னொரு பிரிவினர் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா என்பவர் உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த மாற்றம் வெகு விரைவில் நடைபெறும் என்றும் அதற்கு மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments