Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (14:50 IST)
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மீது, சட்டவிரோத வருமானம் சம்பந்தமான வழக்கு ஏற்கெனவே அமலாக்கத்துறையால் தொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது அவரும் டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்ததாக கூறப்படும் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
 
அமலாக்கத்துறை தகவலின்படி, ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரில் உள்ள ரூ.27.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் டால்மியா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.377 கோடி மதிப்புள்ள நிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல், டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிவித்ததுபடி, முடக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.793 கோடியாகும்.
 
இந்த விவகாரத்தில் முக்கியமான ஒன்றாக, டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம், ஜெகனுக்கு சொந்தமான ரகுராம் சிமென்ட் நிறுவனத்தில் ரூ.95 கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கத் துறைசார்ந்த குத்தகை உரிமை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த நிலமே முடக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்த நடவடிக்கையால் ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களிலும் தொழில் துறையிலும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments