Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களுரில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்.. சீனாவில் தயாரித்தது என தகவல்..!

Advertiesment
Metro

Siva

, ஞாயிறு, 28 ஜனவரி 2024 (09:52 IST)
பெங்களூருக்கு ஓட்டுநர் அல்லாத மெட்ரோ ரயில் வருவதாகவும், இந்த ரயில்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், முதல் ரயில்கள் இன்னும் சில மாதங்களில் பெங்களூருக்கு வர வாய்ப்புள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
 
 உலகின் மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் சீன ரயில் தயாரிப்பு நிறுவனத்திடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், இந்த ரயில்கள்300 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியவை என்றும் தெரிகிறாது.
 
இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில்கள் நகர போக்குவரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த ரயில்கள் குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளது:
 
* இந்த ரயில்கள் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கு முறையில் இயக்கப்படும்.
* இந்த ரயில்களில் உள்ள சென்சார்கள் பாதை நிலை, போக்குவரத்து நிலை போன்றவற்றை கண்காணித்து ரயிலை இயக்க உதவும்.
* இந்த ரயில்கள் பாதுகாப்பானவை மற்றும் பயணிகளுக்கு வசதியானவை.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து எனக்கு உறுதுணையாக இருப்பார்: சீமான்