Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலாளி மீதுள்ள கோபத்தால் 5 வயது சிறுவனை கொலை செய்த டிரைவர்.. ஒரு கொடூர சம்பவம்..!

Advertiesment
பழிவாங்கல் கொலை

Mahendran

, புதன், 22 அக்டோபர் 2025 (09:59 IST)
புதுடெல்லியின் நரேலா பகுதியில், ஒரு ஐந்து வயது சிறுவன் பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக கடத்திக் கொலை செய்யப்பட்டான். சிறுவனின் தந்தையின் டிரைவர் நீது என்பவரே இக்கொலையை செய்துள்ளார்.
 
திங்களன்று, மதுபோதையில் சக ஓட்டுநரை நீது தாக்கியதால், சிறுவனின் தந்தை தலையிட்டு நீதுவை கண்டித்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த அவமானத்தால் ஆத்திரமடைந்த நீது, செவ்வாய்க்கிழமை சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது கடத்தி சென்று, தனது வாடகை அறையில் வைத்து செங்கற்கள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
 
காணாமல் போன சிறுவனின் உடல், நீதுவின் அறையில் இருந்து மீட்கப்பட்டது. மருத்துவமனையில் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
நீது தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய காவல்துறையின் பல தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் 11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. ரூ.4 கோடி சம்பாதிக்கும் ஐடி ஊழியரின் அநாகரீக செயல்..!