Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர்கள் விடுமுறை எடுக்க வேண்டாம் - பிரதமர் மோடி அறிவுரை

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (18:41 IST)
மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு அண்மையில்  ( இலாகா) துறைகள் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடந்து நாட்டின் 17வது மக்களவைத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று தனது அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கினார்.
மோடியின் மத்திய அமைச்சரவையில் 57 மந்திரிகள், 24 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர்களாக 9 பேரும், ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
 
இதனையடுத்து சில முக்கியமான முடிவுகளை மோடி வேகவேகமாக அதிரடியாக எடுத்துவருகிறார். 
 
இந்நிலையில் மோடி சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
 
அதில் மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.தங்களது பணியைச் சிறப்பாக ஆற்ற வேண்டும். புதிய மந்திரிகள் பொறுப்பேற்றதும் வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும் அதில் ஆடம்பரம் வேண்டாம்.
 
அவமரியாதை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.கவனத்துடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்

டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

சிறுவனை கடித்து இழுத்துச் சென்ற தெரு நாய்கள்.. ஓடி வந்து மீட்ட தாய்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments