Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (15:56 IST)
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் இரண்டாவது விமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த நிலையில், அந்த விமானத்தில் வந்தவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவி ஏற்றதிலிருந்து, சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே கடந்த ஐந்தாம் தேதி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் அமிர்தசரஸ் நகருக்கு வந்தது. அப்போது, அவர்கள் கை கால்களில் விலங்குகள் கட்டப்பட்டிருந்தது. இது பெரும் சச்சரவையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று அமிர்தசரஸ் நகருக்கு வந்த இரண்டாவது விமானத்தில் 119 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டதை பயணிகள் உறுதி செய்துள்ளதால், இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments