தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என பெண் சாமியார் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிராச்சி, ஆர்எஸ்எஸ் பிரிவுகளில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரீட்சத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், " பெண்களைப் போல ஆண்களுக்கும் ஒரு தேசிய ஆணையம் அவசியம்" என்று கூறினார்.
"ஒருபுறம், நாட்டில் மனைவிகளால் துன்புறுத்தப்படும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களை விட ஆண்கள்மீது தான் ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. எனவே, ஆண்கள் ஆணையம் இருந்தால் தான் ஆண்களின் பாதுகாப்பிற்கு தேசிய அளவில் ஒரு தீர்வு கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடன் ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும், "ஆண்களை பாதுகாக்கத் தக்க நேரம் வந்துவிட்டது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பப் பிரச்சனைகளின் காரணமாக ஆண்கள் தற்கொலை செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அவரது கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.