Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி வன்முறை; 35 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

டெல்லி வன்முறை; 35 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

Arun Prasath

, வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:48 IST)
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அப்பகுதியில் அமைதி நிலவினாலும் மக்கள் பதற்றத்துடன் இருப்பதாக தெரியவருகிறது. மேலும் அப்பகுதியில் கலவரம் தொடராமல் இருக்க, துணை நிலை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மட்டன் பீஸை லவட்டிய நாய்: துரத்தி சென்று வெட்டிய கறிக்கடைக்காரர்!