Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரவோடு இரவாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய முதல்வரின் அதிரடி

இரவோடு இரவாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய முதல்வரின் அதிரடி
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:59 IST)
இரவோடு இரவாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய முதல்வரின் அதிரடி
டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற பயங்கர வன்முறையில் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினரை முழு கட்டுப்பாட்டில் தற்போது டெல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று டெல்லி வன்முறை குறித்து அதிரடியாக சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. குறிப்பாக முதல்வர் உள்பட உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
 
இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்து நேற்று இரவே துணை முதலமைச்சருடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்றார். மேலும் டெல்லி கலவரத்தால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க உத்தரவிட்ட முதல்வர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திற்கும் நேரடியாக சென்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவுகளை இரவோடு இரவாக நிறைவேற்றிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை பாராட்டிய கமலுக்கு ரசிகர்கள் கண்டனம்