Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேர் கைது...

Advertiesment
Delhi
, புதன், 3 மே 2023 (14:34 IST)
டெல்லியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களின் வீடுகளில் இன்று டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லியில் சட்டவிரோத செயல்களில்  ஈடுபட்டு வரும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள சிலரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி, இன்று டெல்லி மற்றும் அரியானா உள்ளிட்ட 20 இடங்களில் இன்று  காலையில் துவாரகா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், நகைகள்,   சட்டவிரோதமான பொருட்களைக் கைப்பற்றினர். மேலும், ஆயுதசட்டம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம், ஆகிய பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் பிடித்துள்ளனர். 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் புயல் உருவாகிறது. உறுதி செய்த வானிலை ஆய்வு மையம்..!