Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் குறையை கேட்டு கொண்டிருந்த டெல்லி முதல்வர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி..!

Siva
புதன், 20 ஆகஸ்ட் 2025 (10:13 IST)
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தாக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
 
இன்று காலை நடந்த 'ஜன்சுன்வாய்' கூட்டத்தின்போது, ஒரு புகார்தாரர் போல் காட்டிகொண்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் முதலமைச்சரை அருகே சென்று அவரை தாக்கியுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 
 
தாக்குதலுக்குள்ளான முதலமைச்சர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, டெல்லி காவல்துறை உயரதிகாரிகள் முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த நபர் சில ஆவணங்களுடன் வந்து முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரை தாக்கியதாக தெரிவித்தனர்.
 
இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments