Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!

டெல்லி முதலமைச்சர்
Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:12 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுபான ஊழல் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் 
 
விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் டெல்லியில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பின்னர் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments