Publish Date: Wed, 26 Feb 2020 (19:02 IST)
Updated Date: Wed, 26 Feb 2020 (19:04 IST)
டெல்லி வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. சந்துபாக் பகுதியில் அங்கித் ஷர்மா என்ற காவலரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் காயமடைந்த 189 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.