தலித் எம்.பி.யை ஊருக்குள் அனுமதிக்காத கிராம மக்கள்..

Arun Prasath
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (17:33 IST)
தலித் எம்.பி.யை ஒரு கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தீண்டாமை சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.யான ஏ.நாராயணசாமி, பட்டியிலினத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் தனது தொகுதிக்குட்பட்ட பாவாகடா கிராமத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருந்தக நிறுவன அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.

அப்போது ஏ.நாராயணசாமி எம்.பி.யானாலும் அவர் ஒரு பட்டியலினத்தைச் சார்ந்தவர், ஆதலால் அவரை நாங்கள் ஊருக்குள்ளே அனுமதிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட எஸ் பி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா அறிவியல் வளர்ச்சியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், தீண்டாமையும் ஜாதி கொடுமைகளும் கிராமங்களில் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது, சமூக நீதி குறித்த உரையாடல்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments