Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கக் கட்டணம் வசூலிப்பது ரத்து : மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு !

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (21:50 IST)
நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் ரத்து : மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு !

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதாரம் திணறிக்கொண்டிருந்த நிலையில்,  சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்கள், தொழிலாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழிலாளர்கள், சிறு, பெரு நிறுவனங்களைச் சேர்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்கள் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையில் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில், கொரோனா எதிரொலியால் இன்றுமுதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments